சென்ற பதிவில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்தியாசமான தமிழ் திரைப்படங்களை பார்த்தோம். இந்த பதிவில், ஓடாத படங்களை பார்ப்போம். ஓடாத தமிழ் படங்கள் ஒன்று உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்று பதில் கூறலாம். தியேட்டர்களில் பிலிம் ஓடாமல் எப்படி படம் ஓடும்? சாரி பாஸ். மொக்கை காமெடியை செய்ய முயன்றேன். சரி. தலைப்புக்கு வருவோம்.
இந்த படங்கள் ரிலிஸ் ஆச்சா? என்பதை பார்த்தோம். இனி வித்தியாசமான படங்களை பார்ப்போம். வித்தியாசமான படம் என்று நாம் கூறுவது இயல்பை மீறி இருக்கும் படங்கலாகும். அப்படி பட்ட படங்களும் தமிழில் இயக்கப்படுகின்றன. இயல்பு என்று நான் கூறுவது படத்தின் டிரென்டாகும். ரவுடி படங்கள் வந்தால் அதே மாதிரியான படங்கள் நிறைய வெளியாகும். அதே போல் காதல், போலீஸ் என்று பல தர பட்ட டிரெண்டுகளை நாம் பார்த்திருப்போம். சில திரைப்படங்களின் பெயர் வித்தியாசமாக இருக்கும். சில படங்களின் கதை அல்லது திரைக்கதை வித்தியாசமாக இருக்கும்.
போன பதிவில் அட்ட பிளாப் ஆன படங்களை பார்த்தோம். நிறைய திரைப்படங்கள் நல்ல மார்கெட்டிங்கு இல்லாததால், அவைகள் வெளிவந்தாலும் சரியாக ஓடுவதில்லை. சேது போன்ற படங்கள் வாய் வழியாக மக்கள் செய்த மார்கெட்டிங்கினால் பெரும் வெற்றியை பெற்றது. எல்லா திரைப்படங்களும் அவ்வாறு வெற்றி பெருவதில்லை. காணாமல் போன படங்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சரி, இந்த பதிவில், ”இந்த படங்களும் ரிலிஸ் ஆச்சா” என்று கேள்வி எழுப்பும் படங்களை பார்ப்போம்.
தமிழ் திரைப்படங்கள் 2008 தொடர்ச்சியாக முதலில் நாம் அட்ட பிளாப் ஆன படங்களை பற்றி பேசுவோம். அட்ட பிளாப் என்றால படம் தியேட்டரில் வெளியான ஓரிரு வாரத்துக்குள் தியேட்டரை விட்டு ஓடி விடும் படங்களாகும். ஏன் தியேட்டரை விட்டு ஓடுகிறது என்று நாம் நினைத்துப்பார்க்க முடியாது. சில திரைப்படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால், கதை,திரைக்கதை படு கேவலமாக இருக்கும். பட்டு ஒன்றினை மட்டுமே நம்பி படம் எடுத்த காலம் போய்விட்டது. மக்களின் இரசனை மாறிவிட்டது என்பது தான் உண்மை.
சுமார் 62 திரைப்படங்கள் 2008ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளன. என்ன தான் திருட்டு விசிடிக்களையும், இணைய கீழ் இறக்கியையும் ஒழிக்க முடியவில்லையென்றாலும், சில படங்கள் மக்களை தியேட்டருக்குள் சுண்டி இழுக்க தான் செய்கின்றன. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களும், குறைவான செலவில் உருவாக்கப்பட்ட படங்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரனத்துக்கு தசாவதாரம் சுமார் 100 கோடி செலவில் உருவாக்கினர். ஓரளவுக்கு ஓடின. சுப்பிரமணியபுரம் சில கோடிகளே செலவுசெய்து உருவாக்கப்பட்டது. அது மாபெரும் வெற்றியை பெற்றது.
வேண்டும். எனக்கு புதிதாய் ஒரு பூமி!
இருப்பது போதாதா? போதும்
இருந்தாலும் புதிதாய் ஒரு பூமி வேண்டும்.
எதற்காக வேண்டும்? தமிழ் அமுதை
அங்கும் கொஞ்சி விளையாட
விளையாடினால் போதுமா? போதாது என்
மக்களை அங்கு கூட்டிச்செல்ல வேண்டும்!

நீங்க டிவிட்டர் பயன்படுத்துவீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு முற்றிலும் உங்களுக்கானது. டிவிட்டர் என்பது குறும்பதிவு எழுத பயன்படும் சேவையாகும். தற்பொழுது இது அனைவருக்கும் இலவசம். இதுலாம் எங்களுக்குத் தெரியும். மெட்டர்க்கு வா தம்பி.
உங்களது பெரிய பதிவுகளின் தொடுப்பினை அல்லது குறும்பதிவினை #tamil அல்லது #Tamil அல்லது #தமிழ் என்ற சொற்களுடன் ஆரம்பித்து பின்னர் உங்களது இடுகையின் தலைப்பினை இடவும். 160 எழுத்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தொடுப்புகள் எல்லாம் சிறிய தொடுப்பாக தானாகவே மாறிவிடும். ஆகையால் நீங்கள் அதை பற்றி கவலை பட வேண்டாம்.
மும்பை தாக்குதல் குறித்து எனக்கு எழுந்துள்ள கேள்விகள்ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அந்த கேள்விகள் யாவும் மனதில் தென்பட்டவை. உங்களுக்கும் எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டமளியுங்கள்.
Recent comments
51 weeks 1 day ago
51 weeks 3 days ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 3 weeks ago
1 year 4 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago
1 year 9 weeks ago