
கறுப்பு வெள்ளி தினமன்று வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடி கொடுப்பது வியாபாரிகளின் வழக்கமான ஒன்று. நமது ஊரில் எப்படி ஆடி தள்ளுபடி உண்டோ, அது போல தான் இதுவும். கறுப்பு வெள்ளி தினம் என்பது டேங்ஸ்கிவிங்கு நாட்கு பிறகு வரும் வெள்ளிகிழமையாகும். இது அமெரிக்காவில் கிறிஸ்மஸை ஒட்டி கொண்டாடப் படும் தினமாகும். அன்று நிறைய பொருட்கள் வாங்கவும் விற்கவும் மக்கள் விரும்புவர். அன்றைய சிறப்பு தள்ளுபடி பொருட்களை அமேசான்.காமில் எந்த பிரச்சனையுமின்றி வாங்கலாம்
நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;
கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!
இன்று தான் சட்டக்கல்லூரியில் நடந்த கொடூர செயலை விழி வழியாக பார்த்தேன். மாணவர்களுக்குள் நடந்த இந்த மோதலை தடுக்கக் கூட முடியாத கல்லூரி முதல்வர், கொடூர செயலை கண்டும் ஒன்றும் செய்யாமல் விட்ட காவல் துறையினர். இவர்களிடமா நீதி கிடைக்கப்போகிறது? இவர்களிடமா நியாயம் கிடைக்கப்போகிறது? அய்யகோ! நாடு எங்கே போகிறது? இவர்கள் தான் நாளைய இந்தியாவின் தூண்களா? தலைவர்களா இல்லை தலைவலிகளா!
பாராக் ஒபாமா, அமெரிக்க சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது உலக வரலாற்று செய்தியானது. வில்லியம் என்பவர் ”எஸ் வீ கேன் ” என்ற விழியை உருவாக்கியிருக்கிறார். அதனை கீழே காணலாம்.
இந்த புகைப்படத்தினை பார்த்து அசந்துவிடுவீர்கள். ஒரே மேடையில் சூப்பர் ஸ்டாரும் வருங்கால சூப்பர் ஸ்டாரும்...


ஒபாமா, வெற்றி தெரிந்த பின் அவர் ஆற்றிய உரை இங்கு விழியில் காணலாம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
கடந்த அக்டொபர் மாதம் எழுதிய பதிவுகள், நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் பற்றிய ஒரு அலசல்.
மொத்தம் பார்வையாளர்கள்: 4628 (2302 - செப்டம்பர் மாதம்)
மொத்தம் ஹிட்ஸ்: 87479
மொத்தம் எழுதிய பதிவுகள்: 13
மொத்தம் நடத்திய வாக்கெடுப்பு: 3

விஷ்னு மற்றும் கமல் மட்டும்தான் 10 அவதாரங்கள் எடுக்க முடியுமா? என்னல் கூட முடியும்.
எப்படி இருக்கிறது நம்ம போஸ்.... நேரம் கிடைத்தால் பின்னூட்டமளியுங்கள்.
அனைவரும் ஒளவையார் எழுதிய ஆத்திசூடி அறிவீர். சிறு வயதில் படித்திருப்பீர்கள். தமிழ் விக்கிபீடியாவிலிருந்து...
"ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி"
Recent comments
51 weeks 1 day ago
51 weeks 3 days ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 3 weeks ago
1 year 4 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago
1 year 9 weeks ago