தீபாவளி பண்டிகையையெட்டி, பெங்களூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் வர, மூன்று மாதம் முன் IRCTC இணையத்தில் ரிசர்வ் செய்திருந்தேன். முன்னரே விரைவாக ரிசர்வ் செய்தால் பொதுவான படுக்கை(berth) கிடைக்கும் என்ற ஆசைதான். இடைபட்ட படுக்கை கிடைத்தது. எனது இருக்கையின் எண்: 32 ஆக இருந்தது. எனக்கு ஓரத்தில் இருக்கும் படுக்கையில்(side berth) காளை நீட்டி படுக்க முடியாது. படுக்கை சிறிதாக இருக்கும். அதில் மண்னை வாரி போட்டுவிட்டது நேற்று. அதாவது, நான் ரிசர்வ் செய்யும் பொழுது அந்த இரயில் பெட்டியில் சைடு இடைப்பட்ட படுக்கை இல்லை. அண்மையில் அதனை இணைத்ததால் தான் பிரச்சனை. என்னவென்றால், சைடு இடைப்பட்ட படுக்கை வந்ததால், இருக்கைகளின் எண்கள் மாறின. எனது இருக்கை எண் 32லிருந்து 36க்கு மாறியது. 36 என்பது சைடு மேலிருக்கும் படுக்கை. சரி கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து படுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், முடியவில்லை. கால் மேல் கால் கூட போட முடியாது. உட்காரவும் முடியாது. இரயிலின் மேல் பகுதி இடிக்கும்.
அடேங்கப்பா... நமது இந்தியாவில் என்ன அதிசயம். 2008-2009 வது ஆண்டின் மொத்த வருமான வரி வசூல் கடந்த நிதி ஆண்டை விட 32.54 சதவிதமாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் வரியை கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று இதன் மூலம் நாம் அறியலாம். வரியினை கட்டும் மக்கள் அவர்களுக்குரிய வசதிகளை இந்திய அரசு செய்து தருகிறதா என்பது கேள்விக்குறி(எனக்குத் தெரிந்தவரை).
தட்ஸ்தமிழில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இறங்கியது! என்ற செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, கச்சா எண்ணெய் விலை 148 டாலர் வரை விற்கப்பட்டது.
Recent comments
50 weeks 1 day ago
50 weeks 3 days ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 6 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago